October 30, 2007

வன்முறை

தடித்த வார்த்தைகளில்
மெல்லிய மெளனங்களில்
பதிலுக்கு செய்யும் வீம்புகளில்
ஒன்றும் செய்யாத விலகலில்
முறைக்கும் பார்வைகளில்
அவைதம் புறக்கணிப்புகளில்
கோபமான தண்டனைகளில்
சாந்தமான மன்னிப்புகளில்
அறையப்பட்ட சிலுவைகளில்
அணிவிக்கும் மாலைகளில்
துருத்திக் கொண்டு தெரிகிறது
ரத்தருசி பிடித்த வன்முறை நாக்கு.

No comments: