October 30, 2007

கற்பிதம்

"இந்த மேஜை என்ன சொல்கிறது?"
''அந்த மின்விசிறி என்ன சொல்கிறது?"
''காலை உரசிச் செல்லும்
என் பூனைக்குட்டி என்ன சொல்கிறது?"
யோசிப்பில் கிடைத்த பதில்கள்.
''ஒன்றுமே நாங்கள் சொல்லவில்லையே"
-கதறின அவைகளைப் புறந்தள்ளி விட்டு
என் கவிதையைப் பிரசுரிக்க விரைந்தேன்

No comments: