October 30, 2007

எழவெடுத்த கவிதை

சிவப்பு விழுவதற்குள்
சிக்னல் கடக்க விரைகையிலும்,
கடைசி முறையாய் முக்கி
கழிவு நீக்கத்தை முடிக்கையிலும்,
சமையல் ருசி பற்றின
மனைவியின் கேள்விக்கு
பதிலளிக்கும் இடைவெளியிலும்,
இரவில்,கலவி மயக்கத்தில்
தொலைந்த நினைவு திரும்பும்
அந்தரங்க நொடியிலும்,
எங்கிருந்து தான் தோன்றுமோ-
எழவெடுத்த கவிதைக்கு
நேரம் காலமே தெரிவதில்லை.

No comments: