November 1, 2007

இன்னொரு வகை

சுடிதாரில் நான் குனியும்
எந்தவொரு கணத்தையும்
தவறவிடாத கழுகுக்கண்கள்.
பேருந்தில்,ஹோட்டலில்,கடைவீதியில்,
இந்த இடம்தான் என்றில்லாது எங்கும்.
தற்செயல் தவிர
மற்ற எல்லா அர்த்தங்களும்
கற்பிக்கப்படும் என் தீண்டலுக்கு.
எல்லா ஆண்களும்
இப்படித்தான் என்றில்லை
இன்னொரு வகையும் உண்டு
-சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள்.

2 comments:

கானகம் said...

What a fantastic theme, Superb, and your presentation made the poem to read many times... with the hard feelings of self pity or cross checking me with the situtaion...

Very good Prakash... I love this kavidhai and this is kavidhai... ( Since I am in Muscat I dont have tamil fonts..bear with me..)

பிரகாஷ் said...

பாராட்டுக்கு மிக்க நன்றி ஜெயக்குமார்.
எனக்கு வேறு கருத்து உண்டு.
இது ஒரு சுமாரான கவிதைதான்.
எனக்கு,அதிகம் திருப்தியளிக்காத,பிரசுரிப்பதற்கு முன், மிக அதிக தடவைகள் யோசித்துப் பின் அரை மனதோடு பிரசுரிக்கப்பட்ட கவிதை இது.